பிரபல சிங்களப் பாடகர் நிஹால் நெல்சன் காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.
இன்று (13) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் தனது வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவையில் வர்த்தகராக இருந்த ஜி.டி. ஹென்ட்ரிக் மற்றும் ஆங்கில ஆசிரியரான ஹேமா வீரவர்தன ஆகியோரின் ஒரே மகனாக நிஹால் நெல்சன் 1946 ஜனவரி 09 இல் பிறந்தார்.
பாடசாலை பருவத்தில் சங்கீதம் பயின்ற அவர், 1962ஆம் ஆண்டில் தான் எழுதி பாடிய பாடலொன்றை திருமண நிகழ்வொன்றில் பாடி முதன் முதலாக இசைப் பயணத்தை ஆரம்பித்தார்.
பைலா பாடல்களை பாடி புகழ்பெற்ற நிஹால் நெல்சன், 113 இசை அல்பங்களை கெசட் (Cassette) மற்றும் குறுந்தட்டு (CD) மூலம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் முதன் முதலில் குறுந்தட்டு (CD) மூலம் பாடல் வெளியிட்ட பெருமையையும் இவர் கொண்டுள்ளார்.