Date:

தனியார் அரச பஸ் சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் கைகலப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோருக்கு இடையில், இன்று (09) காலை கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

 

இன்று காலை 06.20 மணியளவில், கரடிப்போக்கு சந்தியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் காளமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்  போது பயணிகள் பஸ்களில் இருந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373