Date:

தனியார் அரச பஸ் சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் கைகலப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோருக்கு இடையில், இன்று (09) காலை கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

 

இன்று காலை 06.20 மணியளவில், கரடிப்போக்கு சந்தியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் காளமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்  போது பயணிகள் பஸ்களில் இருந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி யாரும் எதிர்பார்க்காத...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...