வத்தளையில் ஒரு சில இடங்களுக்கு நாளையதினம் (03) 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுமென, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஹெந்தலை பாலத்தின் குறுக்கே நீர்க் குழாய்கள் பதித்தல் மற்றும் அவற்றை பிரதான குழாயுடன் இணைக்கும் நடவடிக்கைகள் காரணமாக, இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (03) முற்பகல் 10.00 மணி முதல் மறுநாள் (04) முற்பகல் 10.00 மணி வரை வத்தளை – நீர்கொழும்பு வீதி, மாபோலயின் ஒரு பகுதி, வெலிக்கடமுல்ல, ஹெந்தல வீதி – நாயககந்த சந்திவரையான அனைத்து உள் வீதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுமென சபை அறிவித்துள்ளது.
அத்துடன் அல்விஸ் டவுண், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலஹதூவ, கெரவலப்பிட்டியவின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களுக்கும் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.