அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது நாளை முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

 

இதற்கமைய, ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

 

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இதன்காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்றும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இதேவேளை, ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் தயாரிப்பாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருக்காததால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிது காலம் வழங்க வேண்டியிருந்ததாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

 

அவ்வாறான வாகனங்களில் ஆசனப் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த இறுதிச் சலுகைக் காலமும் இன்றுடன் முடிவடடைவதாக அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது...

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.   அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு...