பயன்படுத்தி அந்த நூல்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பு சபை போன்ற தேசிய மட்டத்திலான ஆட்சி மன்றங்களில் முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களினதும் சரியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான அரசின் தலையீட்டை விளக்கிய ஜனாதிபதி, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே அரசின் நோக்கம் என்றும் கூறினார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியினட கவனம் செலுத்தப்பட்டதுடன், சீருடைப் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான காரணங்களை முன்வைத்து சமூகத்தில் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் மீண்டும் தலைதூக்கும் சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே நாட்டின் அனைத்து மக்களிடையேயும் சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தி, எவ்விதமான இனவாத அல்லது மத வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்காக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அழிவுகளைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அனைத்து மக்களிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய கத்தோலிக்க மதத் தலைவர்கள், அதற்காகத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


