ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது

பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அளுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் கார் ஒன்று 25ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் மறித்துச் சோதனையிடப்பட்டது. அப்போது, அந்தத் தேரரிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள தேரர், களுத்துறை தெற்கு போம்புவல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் ஆசிரியரான இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் வீரவில பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சாரதி, நவதகல ஹிபன்கந்தவைச் சேர்ந்த, சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்திவரும் 39 வயதுடையவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க  போராட்டத்தில்  ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது...

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று...