நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், இச்சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச நிர்வாகச் சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, இழப்பீடு வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பிலும் அக்குழுவின் மூலம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மேலும், மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலைமை மற்றும் பூரண ஊனமுற்ற நிலைமை தொடர்பில் ஆராய்ந்து, அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதும் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

UPDATE: பொரளை மகசின் சிறை(வெலிக்கடை) பதற்ற சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு!

போரளை மெகசின் சிறைச்சாலையின் E வார்டில் இன்று (06) இரவு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Breaking பொரளை மகசின் சிறையில் பதற்றம்..

பொரளை மகசின் சிறையில் பதற்றம்..படைகள் உஷார் நிலையில்…