தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
#UdhayanidhiStalinarrested #Chennai #Neelankarai #sooriyannews #Srilanka #TruthAtAllCosts


