நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டு, மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (03) மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்


