ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும்.

அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது.

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி நிலவுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக...

முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை

உளவுத்துறை முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைச் செய்யத் தவறியமை...