ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஐந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இன்று தீப்பரவல் ஏற்பட்டது.
தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


