கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் கமகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, தொற்றை பரப்பும் நோக்கில் எவரேனும் செயற்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.