Date:

கறுப்பு யூலை; யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

கருப்பு ஜூலை 23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே அவர்கள் இன்று (24) சபாநாயகர்...

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

உமாஓயா பல்நோக்குத்  திட்டத்தைத்  திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள்...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...