முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றிவைத்தார்.
மேலும் மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார் .இதற்கமைய
மலையகத்தில் பல இடங்களிலும் நேற்று மாலை ஆறு முப்பது மணிக்கு மெழுகுவர்த்தியெற்றி ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தனர்.
இந்நிகழ்வில் இ.தொ.காவின் உப தலைவர் சத்திவேல் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் ,கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாத் ,பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி ,இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் அக்கரபத்தனை பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கலந்துக்கொண்டனர் .