Date:

கறுப்பு யூலை; யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

கருப்பு ஜூலை 23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.சி.சி தலைவர் ஜே ஷா இலங்கைக்கு வருகை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah),...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...