Date:

மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திலிருந்து அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருககாட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திறந்த வெளியரங்கு களியாட்ட மற்றும் இசை நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

விளையாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவக்கூடிய விதமான விளையாட்டுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26...

தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு ! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா - சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம்...

BREAKING NEWS : கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து !

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர்...

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா அழகி !

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி...