முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.