மன்னாரில் இன்று முதல் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முற்பகல் முதல் தலைமன்னார் ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் புனித லோரன்ஸ் தேவாலயம் என்பவற்றில் முன்னெடுக்கப்படுகின்றன.