யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது.
தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
55 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி, மாபெரும் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.