ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய பசில் ராஜபக்ச, தனது சகோதரர்களுடன் நிதி அமைச்சினைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
எனினும், மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்திற்குள்ளேயே இதற்கு ஆட்சேபனைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.