ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது வீட்டில் வைத்து தனது சொந்த வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரது மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட அமெரிக்காவின் ஏழ்மையான நாடான ஹெய்ட்டி, பல்வேறு அரசியல் எச்சரிக்கை நிலைகளுக்கு நடுவில் ஜோவெனல் மொய்ஸ் ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.