கடந்த சில வாரங்களாக நாட்டில் பேசும் பெருளாக மாறியுள்ள பசில் ராஜபக்ஸ விவகாரம் தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது.
எதிர் வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார் எனத் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தேசியப் பட்டியல் பதவியை இராஜினாமா செய்யும் உறுப்பினருக்கு அவுஸ்திரேலியாவில் உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.