அன்று நாடாளுமன்றத்தில் தாக்குதலில் இருந்து தப்பிக்க தப்பியோடிய சரத் பொன்சேகா, தற்போது தமது கட்சியினருக்கு முன்னால் வீரனை போல் பேசி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு முறை நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் அப்போது தான் உட்பட சிலர் சபை நடுவுக்கு வந்து பொன்சேகாவை காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.