முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.
கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் எனவும், பார்பிக்யூ விருந்துபசாரங்களை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நண்பர்கள் ஒன்றாக கூட முடியும் எனவும், முகக் கவசம் அணியாது விருந்துபசாரங்களில் பங்கேற்க முடியும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சுமார் 26 வீதமானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.