Date:

தடுப்பூசி போட்டவர்கள் கட்டிப்பிடித்துக் கொள்ள முடியும்

முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.

கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் எனவும், பார்பிக்யூ விருந்துபசாரங்களை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நண்பர்கள் ஒன்றாக கூட முடியும் எனவும், முகக் கவசம் அணியாது விருந்துபசாரங்களில் பங்கேற்க முடியும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 26 வீதமானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...