தேங்காய் விலை அதிகரிப்பு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாகச் சொன்னால், சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில்...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற...

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

நவம்பர் 14 திகதி பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.   குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.   அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான செய்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...