கொழும்பு, புறக்கோட்டையில் கட்டமொன்றில் தீ

கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியில் உள்ள கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம் – வர்த்தமானி வௌியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்கு தொடர்பில் ஆராய்வு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு...

இங்கிலாந்து தொடருக்கு கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக...

விமானப் படையின் விமானம் அவசரமாக தரையிறக்கம்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில்...

நெடுஞ்சாலை சிலவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார். கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு...

11 மாவட்டங்களில் 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,...

சீரற்ற வானிலையால் இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்...