BREAKING : மீண்டும் முடக்கம் தொடர்பான விசேட ஆலோசனை

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில்...

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணம் (விபரம் இணைப்பு)

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 41 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 4727 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பில் பெண்கள் உட்பட பல ஆசிரியர்கள் அதிரடியாக கைது

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் காரணமாக காலிமுகத்திடலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. காலிமுகத்திடத்திற்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது...

கொத்தலாவல சட்ட வரைபு சமர்ப்பிக்கப்படமாட்டாது

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனம்

இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார். வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர், முஸ்லிம்களை நம்பவில்லை – விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம்...

தேருநர் இடாப் : வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கவும் (Attach link)

2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல், பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல் போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக...

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு கொவிட் தொற்று

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.