நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நாட்டை முற்றாக முடக்காமல் மேல்மாகாணத்தை மட்டும் முடக்கவும் மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் போக்குவரத்தை மட்டுபடுத்தவும் தீவிரமாக ஆராயப்பட்டுவருக்கிறது.
இது தொடர்பில் இன்று மாலை விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.