Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறப்பு .
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் கலீல் அல் மஹ்மூத் ஆகியோர் இக்கட்டிடத்தை திறந்துவைத்தனர். கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பாடசாலை அதிபர் நஃப்ராஸ் நிலார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, “கல்வி உலகளவில் மற்றும் குறிப்பாக இலங்கையில் அமைப்பின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது” என்றார்.



