ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.
அதேநேரம், நாளையதினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு கூடவுள்ளது.
இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.