Date:

மக்கள் ஆணையை மதித்து ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்துங்கள்-சஜித்

தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் காரணியாக இருந்தது எனவும்,இந்த ஆர்வ உறுதிமொழி பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் இன்று ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உயிர்களைப் போன்று அவர்களின் இரத்திலும்,பினத்திலும் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு இவ்வாறான ஈஸ்டர் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஆனால் நடப்பது மந்தமான மற்றும் சந்தேகத்திற்குரிய விசாரணை செயல்முறையாகும் எனவும் தெரிவித்தார்.

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலய கட்டிடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அன்மையில் தகவல் வெளியாகி இருந்ததோடு,இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இன்று (19) காலை தேவாலயத்திற்குச் சமூகமளித்தார்.இதன் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன் வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...