நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள செல்லுவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் குறித்த நாளில் திறந்து வைக்கப்படுவதுடன், ஓய்வூதியம் பெறுபவர்கள் முப்படையினரால் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.