பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்று (08) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அவர்கள் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.