Date:

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இன்று காலை நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், இன்று காலை வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எவ்வித பரிந்துரையும் பெறப்படவில்லை எனக் கூறினார்.
”ஜனாதிபதி அல்லது செயலணியிடமிருந்து இது போன்ற எந்தவொரு பரிந்துரையும் பெறப்படவில்லை; வழக்கமாக அவ்வாறு இருந்தால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும்” என்றார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 14இல் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க இன்னும் ஒரு வாரம் உள்ளது எனக் கூறிய அவர், நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்பே ஒரு முடிவு எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜே. எம் . மீடியா நிறுவன ஏற்பாட்டில் இலவச ஊடக செயலமர்வு. எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில்…

    ஜே.எம். மீடியா நிறுவனம் பத்தாவது வருடமாகவும் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு...

மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் காங்கிரஸின் கரத்தை பலப்படுத்துங்கள்- எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில், கட்டான பிரதேச சபையில்...

கண்டி செல்வோருக்கான விசேட அறிவிப்பு

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ளது.   கண்டி...

VAT வரி தொடர்பில் வௌியான அறிவிப்பு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373