Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்

இலங்கையில் இருந்து டுபாய் நோக்கி கொண்டு செல்ல முயற்சித்த ஒரு கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பணத்துடன் சந்தேக நபர் ஒருவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபாய் இலங்கை பணம் மற்றும் 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பணி புரியும் சுங்க அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...