Date:

கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம்-இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...