இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்த்ரா த்விவேதி நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாள் விஜயமாக நாட்டிற்கு வரும் அவர் இலங்கை இராணுவ தளபதி, பாதுகாப்பு பிரதியமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளர்.
பயிற்சி ஒத்துழைப்பு, வலயத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும். இதேவேளை கொழும்பிலுள்ள இந்திய அமைதிப் படையணியின் நினைவுத் தூபிக்கும் அவர் மரியாதை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







