Date:

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து செயல்படும் புதிய கல்வி முறையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த முத்தரப்பு அணுகுமுறை – அரசின் வழிகாட்டுதல், இளைய சமுதாயத்தின் பங்கேற்பு மற்றும் தனியார் துறையின் புத்தாக்கங்கள் – இலங்கையின் டிஜிட்டல் கல்வி எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

அரசாங்கம்: டிஜிட்டல் கற்றலுக்கான கொள்கையும், உட்கட்டமைப்பும்

டிஜிட்டல் கல்வி வளர்ச்சியில் அரசாங்கத்தின் பங்கு மிக முக்கியமானது. இலங்கை அரசானது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடசாலைகளில் நிரலாக்கக் கல்வி, மற்றும் கிராமப்புற டிஜிட்டல் கற்றல் மையங்கள் போன்ற திட்டங்கள் மூலம் எதிர்கால தொழில் தேவைகளுக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துகிறது.

ஆனால், உட்கட்டமைப்பு மட்டும் போதாது என்பதை அரசு உணர்ந்துள்ளது. பயனுள்ள டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்க தனியார் துறையுடன் கூட்டுறவு, உள்ளூர் மொழிகளில் கல்வி கற்றல் மற்றும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பங்கேற்பை உறுதி செய்யும் கொள்கைகளும் அவசியம். இதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும்.

இளைஞர்கள்: பார்வையாளர்களிலிருந்து இணை உருவாக்குநர்களாக

தெற்காசியாவிலேயே மிக அதிகமாக இணையத்துடன் ஒன்றிணைந்த தலைமுறையினராக இலங்கை இளைஞர்கள் திகழ்கின்றனர். இவர்கள் தொழில்நுட்பத்தை வெறும் தகவல் பெறுவதற்கு மட்டுமல்லாமல், புதிய உள்ளடக்கங்களை உருவாக்கவும், கூட்டாக செயல்படவும், தொடர்பு கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய செயல்பாட்டு கலாச்சாரம் அவர்களை கற்றலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் சக்திகளாக மாற்றியுள்ளது.

இளைஞர்கள் TikTok, YouTube அல்லது உள்ளூர் கல்வி சார்ந்த செயலிகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் முதல் ரோபாட்டிக்ஸ் வரை சிக்கலான தலைப்புகளை விளக்கும்போது, அவர்கள் வெறும் காணொளிகளைப் பகிர்வது மட்டுமல்ல, அறிவை சமூக கலாச்சாரமாக மாற்றுகின்றனர். கல்வியை அனைவருக்கும் தொடர்புடையதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகின்றனர். இந்த ஆற்றலை ஒழுங்கமைக்கப்பட்ட, நம்பத்தகுந்த மற்றும் தேசியக் கற்றல் இலக்குகளோடு இணைந்த வழிகளில் வழிநடத்துவதில்தான் சவாலும் வாய்ப்பும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி...

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்...