ஜூலை 1 முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பழைய பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லாததால், அவற்றை பொருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும் என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை மறுநாள்இ ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.