Date:

பாலஸ்தீனுக்கு கை கொடுக்கும் சவுதி

சவுதி அரேபிய அரசினால் பலஸ்தீன மக்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று (27) அன்பளிப்பாக வழங்கப்பட்டது

 

இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரேபிய அரசு பாலஸ்தீனுக்கு தொடர்ந்தும் உதவும் திட்டத்தின் கீழ் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 9,150,000,000) அன்பளிப்பாக வழங்கியது.

 

கடந்த சில ஆண்டுகளில் சவுதி அரேபியா பாலஸ்தீன மக்களுக்கு உதவும் முகமாக சுமார் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது பாலஸ்தீனுக்கு சவுதி அரேபியா தொடர்ச்சியாக வழங்கும் அதன் ஆதரவின் ஒரு பகுதியான மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மேம்பாட்டு உதவிகளுக்குரியதாகும்.

 

சகோதர பாலஸ்தீன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கும், அவர்களின் துன்பங்களைத் தணிப்பதற்கும் சவுதி அரேபியா தொடர்ந்தும் உதவுகிறது.

 

இது பலஸ்தீன் அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ச்சியாக உதவுவதாக வாக்களித்த சவுதி அரேபியாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பின்னணியிலும், பலஸ்தீன் மக்களுக்கு செய்யும் கடமையுணர்விலும் அமைந்த மிகப் பெரிய மனிதாபிமான உதவியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செயற்கைக் கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு…

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த...

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை பறிபோனது…!

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின்...

பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்னாசிப் பழம்…!

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண...

வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம்…?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக...