Date:

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின் பின்னணியில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது.

 

அதில், ஈரானில் 41 இலங்கையர்கள் இருந்ததாகவும், அவர்களில் நான்கு பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஐந்து அதிகாரிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

 

இதற்கிடையில், ஈரானில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் நான்கு பேர் நாளை (23) துருக்கி எல்லை வழியாக வெளியேற உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

 

அவர்களில் எட்டு பேர் ஈரான் பிரஜைகளுடன் திருமணமாகி வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளை பஸ் விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார் பதுளை - மஹியங்கனை பிரதான...

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க...

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...