இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சியை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டின் கோம் மாகாணத்தில் உள்ள காவல் உளவுத்துறையின் தலைவர் இதனை உறுதிப்படித்தியுள்ளார்.
குறிப்பாக, இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.