அநுராதபுரத்தில் கொவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இந்த 6 பேரும் வீடு திரும்பியுள்ளனர்.
அநுராதபுரம், சாலியவத்தை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.