Date:

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

நகர சபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல் அலுவலாக புதிய மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மாநகரசபை மேயர் தேர்ந்தெடுப்படவுள்ளனர்.

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் எந்தக் கட்சியும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மாநகரசபை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

 

இதற்கிடையில், மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், மேலும் 20 உள்ளூராட்சி நிறுவனங்களின் கன்னி அமர்வுகள் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373