கொரோனா பரிசோதனைகளைச் செயலிழக்கச் செய்வது மற்றும் எழுமாறான மாதிரிக்கான வழிகளைத் தடுப்பதன் மூலமும், நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் பி.சி.ஆர். பரிசோதனைகளை முழுமையாக நிறுத்துவதன் மூலமும் மீண்டுமொரு கோவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
‘கொவிட்’ சமூகமயமாக்கல் தொடர்பில் சுகாதார அமைச்சு இன்னும் தெளிவான அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் நாடு சமூகமயமாக்கப்பட்ட தொற்றுநோயை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த அவர்,
விஞ்ஞான ரீதியிலான கண்காணிப்பு இல்லாமல் அதை கட்டுப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சில நிபுணர்கள் வேண்டுமென்றே கணிப்புகளுக்கான வழிகளைத் தடுத்துள்ளனர் என்றும் மேலும் அலைகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மற்றோர் அலை ஏற்பட்டால் அத்தகைய நிபுணர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.