Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு!

இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் (15) வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றன.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் அனுசரனையுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்தக் கல்விக் கருத்தரங்குகளின் இறுதி நாள் நிகழ்வில் சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இக்கல்விக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண அமர்வு (14) புதன்கிழமை விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்திலும் இறுதி நாள் நிகழ்வு கொழும்பு டவர் மண்டபத்திலும் இடம்பெற்றன.

அங்குரார்பண அமர்வில் சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சின் ரியாத் பிரிவிற்குப் பொறுப்பாகவுள்ள முஹம்மத் பின் சுலைமான் அல் புரைஹ் சிறப்புரையாற்றியதோடு, இறுதிநாள் நிகழ்வில் முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட திணைக்களத்தின் உயரதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு வட பிராந்திய அரபுக் கல்லூரியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 2000க்கு மேற்பட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், அரச உயர் அதிகாரிகள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உஸ்தாத்மார்கள், உயர் தர மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்குபற்றி இதன்மூலம் நன்மையடைந்தனர்.

விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் (14) புதன்கிழமை இரண்டு அமர்வுகளும் (15) வியாழக்கிழமை டவர் மண்டபத்தில் மேலும் இரண்டு அமர்வுகளுமாக இரண்டு நாட்களும் 4 அமர்வுகள் இடம்பெற்றன.

இறுதிநாள் நிகழ்வில், சிறப்புரையாற்றிய முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ள் திணைக்களத்தினால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

சவூதி அரேபிய அரசின் பூரண அனுசரணையில் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ள் திணைக்களத்தினால் சவூதி அரேபிய மன்னர் உட்பட்ட சவூதி அரேபிய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373