Date:

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி?

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

 

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

 

மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.

 

இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...