Date:

இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நேற்று(12) பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வந்தமையினால் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 

எவ்வாறாயினும், இன்றும் பொதுமக்களுக்குப் போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு மற்றும் சேவை மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் ஷெரில் அதுகோரல தெரிவித்தார்.

 

அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களில் ஈடுபடும் மக்களின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு மேலதிகமாக 40 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...